இலங்கையிலிருந்து தாயகத்திற்கு திரும்பஅழைத்துவரப்பட்ட அம்மக்களுக்கான இடம் “தூய்மைபாரதத்திற்கு” வெளியே தான் உள்ளது போலும். ஆம். நீலகிரியிலும், கோவை வால்பாறையிலும் பரந்து விரிந்துள்ள அரசு நிறுவனமான தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிலையைபற்றி அறிகிற போது அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.
இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்காக என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் ஆகும். இந்த அரசு நிறுவனத்தில், குன்னூர் பகாசூரன் மலை, டைகர் ஹில், கோத்தகிரி குயின்ஸ் சோலை, கூடலூர் தேவாலா, பந்தலூர் கொளப்பள்ளி, சேரங்கோடு, சேரம்பாடி என பல்வேறு இடங்களில்ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அவர் களுக்கான குடியிருப்புகளை அரசுபல இடங்களில் கட்டிக் கொடுத் திருக்கிறது. ஆனாலும் கழிவறைவசதியில்லை. இந்த கோரிக்கையை முன்வைத்து பலமுறை தேயிலை தோட்டக் கழக நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. பணியாற்றும் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் தலித் மக்கள் என்பதாலோஎன்னவோ, இப்பிரச்சனை அலட்சியமாகவே பார்க்கப்படுகிறது.
நாகரிக உலகில் கழிவறை எனும் அடிப்படை தேவையை கூட தங்கள் லாப நட்டக் கணக்கோடு ஒப்பீடு செய்து கிடப்பில் போட்டிருக்கிற மாநில அரசும், திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழிப்பதற் காகவே “தூய்மை பாரதம்” எனும்திட்டத்தை ஆடம்பரமாக துவங்கிய மத்திய அரசும், தலித்தொழிலாளர்களின் இப்பிரச்னை யில் பாராமுகமாகவே இருந்த தால், இப்பிரச்சனையை கையில் எடுத்து போராட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், நீலகிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியனும் இணைந்து, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர், பந்தலூர்வட்டாட்சியர், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் அலுவலகங்களை செப்டம்பர் 30 அன்று தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் தலையிட்டு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டு மெனவும், இக்கோரிக்கையின் மீதான தீர்வை எட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருவ தாகவும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மத்திய அரசின் திட்டமான “சிறப்பு பகுதிகள் மேம்பாட்டு திட்ட நிதி” யின் கீழ் உடனடியாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கழிவறை கட்டும் பணிகள் துவங்கப்படும் எனவும், குறித்த காலத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டி முடிக்கபடும் எனும் உடன்பாட்டை தொட ர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்பேச்சுவார்த்தைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பி.ரமேஷ், நிர்வாகிஎஸ்.ராஜன், விவசாயத்தொழி லாளர் சங்க மாவட்ட அமைப்பா ளர் பன்னீர் செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.